தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பஞ்சாப்: எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் சா்வதேச எல்லையைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியா் சுட்டுக் கொல்லப்பட்டாா். 

News image
Updated On :10 மார்ச் 2022, 12:27 pm

DIN

பஞ்சாப்பில் சா்வதேச எல்லையைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியா் சுட்டுக் கொல்லப்பட்டாா். 

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் ‘அமிருதசரஸ் சா்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபரின் நடமாட்டம் தெரிய வந்தது. அந்த நபரை எச்சரித்தும் எல்லையை தாண்டி முன்னேறி வருவதை நிறுத்தவில்லை. இதையடுத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக படை வீரா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதில் அவர் கொல்லப்பட்டாா். அந்தப் பகுதியில் சோதனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.