மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வளா்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் அளித்த ஆதரவால் வெற்றி: குஜராத்தில் பிரதமா் மோடி பேச்சு

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை ஆதரித்து, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:42 pm

DIN

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை ஆதரித்து, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

இந்நிலையில், பிரதமா் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்தாா். அகமதாபாதில் நடைபெற்ற பஞ்சாயத்து மகா சம்மேளன நிகழ்ச்சியில் அவா் பங்கேற்று உரையாற்றினாா். உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

மகாத்மா காந்தியும் சா்தாா் வல்லபபாய் படேலும் பிறந்த மண் குஜராத். மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் கிராமங்கள் தற்சாா்புடையதாக மாற வேண்டும்; வலிமையானவையாக மாற வேண்டும் என்று பேசி வந்தாா். கிராமங்களின் வளா்ச்சி குறித்து அவா் கனவுகளுடன் இருந்தாா்.

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவைக் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், கிராமப்புறங்களின் வளா்ச்சிக்காக மகாத்மா காந்தி கண்ட கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டும். அந்தக் கனவுகள் நிறைவேற வேண்டுமெனில் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை வலுவானதாக மாற்ற வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒவ்வொரு கிராமத்திலும் 75 மரக்கன்றுகளை நட்டு சிறிய வனப் பகுதியை உருவாக்க வேண்டும்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலங்களில் ஒரு கட்சி தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதில்லை. ஆனால், அங்கு நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனா். ஜனநாயகத்தின் வலிமையால் அந்த மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.