‘மஞ்சள் நிற டர்பனும், துப்பட்டாவும் அணிந்து வாருங்கள்’: பகவந்த் மான்
பதவியேற்பு விழாவுக்கு மஞ்சள் நிற டர்பனும், துப்பட்டாவும் அணிந்து வாருங்கள் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

பகவந்த் மான்

பகவந்த் மான்
பதவியேற்பு விழாவுக்கு மஞ்சள் நிற டர்பனும், துப்பட்டாவும் அணிந்து வாருங்கள் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் பகவந்த் மான் முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு விழாவானது ராஜ்பவனுக்கு பதிலாக பகத்சிங் ஊரான கட்டர் காலனில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பகவந்த் மான் இன்று வெளியிட்ட செய்தியில்,
“மார்ச் 16ஆம் தேதி அனைத்து மக்களும் கட்டர் காலனுக்கு வருமாறு வேண்டுகிறேன். நிகழ்விற்கு வரும் சகோதரர்கள் மஞ்சள் நிற டர்பனும், சகோதரிகள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். பகத்சிங் ஊரான கட்டர் காலனை மஞ்சள் நிறமாக மாற்றுவோம் என்றார்.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...