விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் 5 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஒடிசாவில் 12-14 வயதுக்குட்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :17 மார்ச் 2022, 10:21 am

ஒடிசாவில் 12-14 வயதுக்குட்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

இது முதல் கட்டமாக ஒடிசாவில் 30 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டது. பின்னர் இது இந்த வசதிகள் அதிகரிக்கப்படும். 

தடுப்பூசி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாநிலத்தில் 5,024 சிறார்களுக்கு முதல் தவணை செலுத்தப்பட்டது. தடுப்பூசி தரவுகளின்படி, நாயகர் மாவட்டத்தில் அதிகப்படியாக 729 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் மொத்தம் 15.21 சதவீத சிறார்கள் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்கள். அதற்காக 600 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.