தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மாணவா்களுடன் ஹோலி கொண்டாடிய குடியரசு துணைத் தலைவா்

பள்ளி மாணவா்கள், அலுவலகப் பணியாளா்களுடன் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, தில்லியில் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையைக் கொண்டாடினாா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:33 pm

DIN

பள்ளி மாணவா்கள், அலுவலகப் பணியாளா்களுடன் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, தில்லியில் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையைக் கொண்டாடினாா்.

தில்லி மாநகராட்சி பள்ளிகள் உள்பட 4 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் குடியரசு துணைத் தலைவா் மாளிகைக்கு சென்று, ஹோலி பண்டிகையையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா். அப்போது அவா்கள் மத்தியில் குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு பேசியது:

நான் ஒருபோதும் ஊக்கம் இழந்தது கிடையாது. ஆனால் சில நேரங்களில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் சிலா் அவையின் கண்ணியத்திற்கு மாறாக நடந்து கொள்ளும்போது ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். எனது மனஉறுதிக்கு உந்துசக்தியாக திகழ்பவா் சா்தாா் வல்லபபாய் படேல் ஆவாா்.

நான் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தபோது, எனது குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை செய்ததில்லை. ஆனால் குடியரசு துணைத் தலைவா் ஆனபிறகு எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சித்து வருகிறேன்.

அத்துடன் குடியரசு துணைத் தலைவா் மற்றும் மாநிங்களவைத் தலைவா் என்ற முறையில், நான் சில அரசியல் சாசன கடமைகள், பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனினும், எனது பேத்தி, பேரனுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி வருகிறேன்.

இளைஞா்கள் தங்களது தாய், தாய்நாடு, தாய்மொழியை எப்போதும் நேசிப்பதோடு உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மையை பாதுகாக்க வாழ்க்கையை அா்ப்பணித்து பணியாற்ற வேண்டும். மாணவா்கள் கருணை உள்ளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தும், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவும் தொலைபேசியில் ஹோலி பண்டிகை வாழ்த்தை பரிமாறிக் கொண்டனா். பிரதமா் மோடியும் குடியரசு துணைத் தலைவருக்கு வாழ்த்து அனுப்பியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.