பஞ்சாபைத் தொடர்ந்து உ.பி.யை குறிவைக்கும் ஆம் ஆத்மி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக தயாராக தனது கட்சித் தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி மாநில பொறுப்பாளர் சஞ்சய் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சஞ்சய் சிங் (கோப்புப் படம்)
சஞ்சய் சிங் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read


உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக தயாராக தனது கட்சித் தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி மாநில பொறுப்பாளர் சஞ்சய் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து ஆம் ஆத்மி கட்சி களப்பணிகளை செய்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கடந்த இரு நாள்களாக கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியில் ஆலோசனைகள் நடைபெற்றன. 

இதில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பாளர் சஞ்சய் சிங், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான களப்பணிகளைத் தொடங்க தயாராக உத்தரவிட்டார். மேலும், மற்ற தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி உருவாகும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com