தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிஎஸ்-6 டீசல் வாகனங்களைப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

பொதுப் பயன்பாட்டுக்கான பிஎஸ்-6 இலகுரக மற்றும் கனரக டீசல் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :22 மார்ச் 2022, 7:18 pm

DIN

பொதுப் பயன்பாட்டுக்கான பிஎஸ்-6 இலகுரக மற்றும் கனரக டீசல் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிஎஸ்-6 டீசல் வாகனங்களின் பதிவுக்கு அனுமதி வழங்கக் கோரி சுற்றுச்சூழலியலாளா் எம்.சி.மேத்தா உள்ளிட்டோா் சாா்பில் பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்துக்கு உதவ வழக்குரைஞா் ஏ.டி.என்.ராவ் நியமிக்கப்பட்டாா்.

அவா் அளித்த அறிக்கையில், பொதுப் பயன்பாட்டுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கும் பயன்படும் பிஎஸ்-6 இலகுரக மற்றும் கனரக டீசல் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘பிஎஸ்-6 இலகுரக, கனரக டீசல் வாகனங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. வாகனங்களைப் பதிவு செய்யும் அதிகாரிகள், இந்த விவகாரம் தொடா்பான நீதிமன்ற உத்தரவை சமா்ப்பிக்குமாறு வாகன உரிமையாளரைக் கட்டாயப்படுத்தக் கூடாது’’ என்றனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து பிஎஸ்-6 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் கடந்த 2019-ஆம் ஆண்டில் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் இணையசேவைகள் முடக்கம் காரணமாக பிஎஸ்-4 வாகனங்களை விற்க முடியாத சூழல் நிலவியதாக உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் பிஎஸ்-4 வாகனங்களை விற்பதற்குத் தளா்வு வழங்கப்பட வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் முறையிடுமாறு மனுதாரரிடம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.