உத்தரகண்ட் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க | மணிப்பூர் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பிரேன் சிங்
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.