முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம்.. முதல் முறையாக தாராவியில்

நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல், தாராவில் கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது.

News image

பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம்.. முதல் முறையாக தாராவியில்

Updated On :25 மார்ச் 2022, 6:17 pm IST


மும்பை: நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல், தாராவில் கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், அங்கு கரோனா பரவல் கடுமையாக இருந்த நிலையில், நேற்று புதிதாக கரோனா பாதிப்பும், பலியும் கூட இல்லாத நாளாக அமைந்தது.

மும்பை மாநகராட்சி வெளியிட்ட புள்ளி விவரத்தில், தாராவியில் மட்டும் இதுவரை 8,233 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 419 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவியில் கரோனா நோயாளிகள் இல்லாத நிலையில், தாதர் மற்றும் மாஹமில் தலா ஒரு கரோனா நோயாளி இருக்கிறார்கள்.

இன்று முற்றிலும் பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம் நாளாக அமைந்துவிட்டது. அப்பகுதி சுகாதார அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் எடுத்த கடுமையான நடவடிக்கையால்தான் இது நிகழ்ந்துள்ளது. இங்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதை செய்துமுடித்துள்ளோம். மறுபக்கம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்கிறார் நகராட்சி ஆணையர் கிரண்.

மிகக் குறுகிய பகுதியில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு 5,000 சிறு தொழில்கள், தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் நடக்கின்றன. அங்கு 2020 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 2020ஆம் ஆண்டில் தாராவிதான் கரோனா பரவலில் மிக முக்கிய அபாயப் பகுதியாக இருந்தது. தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.