என்று மாறும் இந்த நிலை? 10 கி.மீ. மகளின் உடலை சுமந்து சென்ற தந்தை
சத்தீஸ்கர் மாநிலத்தில், மருத்துவமனையில் மரணமடைந்த தனது மகளின் உடலை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு அவரது தந்தையே தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.


சத்தீஸ்கர் மாநிலத்தில், மருத்துவமனையில் மரணமடைந்த தனது மகளின் உடலை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு அவரது தந்தையே தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.
மகள் மரணமடைந்த வேதனையுடன், அவரது உடலை தந்தை தனது தோளில் சுமந்து செல்லும் விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ். சிங் டியோ கூறுகையில், மகளின் உடலை தந்தை தோளில் சுமந்து செல்லும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், சத்தீஸ்கர் மாநிலம், சிர்குஜா மாவட்டம் லகன்பூர் கிராமத்தைச் ச்ரந்த சிறுமி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, ஆக்ஸிஜன் அளவு 60க்கும் கீழ் குறைந்துள்ளது. மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார்.
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடலை எடுத்துச் செல்லும் வாகனம் வரும் வரை காத்திருக்குமாறு கூறினோம். ஆனால் அதை அவர்கள் கேட்காமல் உடலை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...