திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கேரளத்தில் எப்படி இருக்கிறது வேலை நிறுத்தம்: முழு பார்வை

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்  கேரளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

News image
கேரளத்தில் எப்படி இருக்கிறது வேலை நிறுத்தம்: முழு பார்வை
Updated On :28 மார்ச் 2022, 6:14 am

PTI


திருவனந்தபுரம்: நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்  கேரளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனல பலரையும் பாதிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தன. 

இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளும், கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடின.

டிரக்குகள், லாரிகள் உள்ளிட்ட வணிக ரீதியிலான வாகனங்களும் முழுமையாக இயக்கப்படாமல், பொது வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பால், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ்கள் வழக்கம் போல இயங்கின.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், சில இடங்களில் போராட்டக்காரர்கள், தனியார் நிறுவனங்களுக்குச் சென்ற ஊழியர்களை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு ஊர்களிலிருந்து திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி, அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்தவர்களுக்கு காவல்துறையினர் வாகன வசதி செய்து கொடுத்தனர்.

இந்த பொது முடக்கத்தில், கேரளத்தில் உள்ள பாரதிய மஸ்தூர் சங் அமைப்பைத் தவிர அனைத்து தொழிலாளர் சங்கங்களும், கட்சிகளும் பங்கேற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.