புது தில்லி: கரோனா பலி எண்ணிக்கையை வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியிருக்கும் பாஜக, உலக சுகாதார அமைப்பின் டேட்டாவும் காங்கிரஸ் கட்சியின் பேட்டாவும் (மகன்) தவறு என்று தெரிவித்துள்ளது.
அறிவியல் பொய் சொல்லாது பிரதமர் மோடி சொல்வார் என்று ராகுல் காந்தி கூறியிருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கையை பாஜக வெளியிட்டிருக்கிறது.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, உலக நாடுகளில் கரோனாவுக்கு பலியானோர் புள்ளிவிவரத்தை உலக சுகாதார அமைப்பு கணக்கிட்ட முறையில் தவறு உள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு இந்தியாவின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதலே பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ராகுல் காந்தி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புக்ளை பதிவு செய்ய உரிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. உலக சுகாதார நிறுவன டேட்டாவும், காங்கிரஸ் கட்சியின் பேட்டாவும் (ராகுல் காந்தி) தவறு என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - விருச்சிகம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - துலாம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கன்னி

வார பலன்கள் (ஏப். 24 - 30) - சிம்மம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


