மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு

கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :7 மே 2022, 11:04 am

புது தில்லி:  கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, கௌஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசு அவர்களை நியமித்ததுள்ளது. கொலிஜியம் தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையில் உள்ளது.

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அறிவிப்பில், குடியரசுத் தலைவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி சுதன்ஷு துலியாவை மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் பர்ஜோர் பர்டிவாலாவை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது


உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.