நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இலங்கையில் ஜனநாயகம் நிலவ இந்தியா ஆதரவுவெளியுறவு அமைச்சகம்

இலங்கையில் ஜனநாயகம் நிலவ இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.

Updated On :10 மே 2022, 8:01 pm

இலங்கையில் ஜனநாயகம் நிலவ இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘வரலாற்று ரீதியான பிணைப்புடன் இந்தியாவின் அண்டை நாடாக உள்ள இலங்கையில் ஜனநாயகமும் ஸ்திரத்தன்மையும் நிலவ, அந்நாட்டின் பொருளாதாரம் மீண்டுவர இந்தியா முழுமையாக ஆதரவு அளிக்கிறது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், தனது நெருக்கடிகளைக் கடந்துவர இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.27,000 கோடி) அதிகமாக கடன் அளித்துள்ளது. அத்துடன் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டைப் போக்கவும் இந்தியா உதவியுள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.