சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

ஒடிசாவில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். 

News image
தேசத் துரோக வழக்கில் கைதானவர்கள் பிணை கோரலாம் உச்ச நீதிமன்றம்
Updated On :12 மே 2022, 8:09 am

DIN

ஒடிசாவில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். 

கந்தகிரி காவல் நிலையத்திற்கு உள்பட்ட பாரமுண்டா மைதானத்தில் புதன்கிழமை நள்ளிரவு துப்பாக்கிச் சூடு  நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள் காயமடைந்தனர். 

பாரமுண்டா ஹவுசிங் போர்டு காலனியில் ஆயுதம் ஏந்தியபடி கொள்ளையடிக்க சக்கரா பாரிக் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கானாடகிரி போலீஸார் சிறப்புப் படையினருடன் அந்த மர்மநபரை பிடிக்க மைதானத்துக்கு வந்தனர்.

காவல்துறையினர் அவர்களை நெருங்கி வருவதைக் கண்டு, குற்றவாளிகள் காவலர்கள் மீது கைக்குண்டு வீசினர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

பதிலடி கொடுக்கும் வகையில், காவல்துறையும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சண்டையில், குற்றவாளிகளில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் தப்பியுள்ளார். 

காயமடைந்தவர் குற்றவாளி பாரிக் என்று அடையாளம் காணப்பட்டது. இவர் பிரபல குற்றவாளி என்றும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் துணை ஆணையர் பிரதிக் சிங் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கி மற்றும் ஒரு காரை போலீசார் கைப்பற்றினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.