அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தெலங்கானாவில் நாளை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித்ஷா

தெலங்கானா பிரிவு தலைவர் சஞ்சய் குமாரின் இரண்டாம் கட்ட பாத யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 

News image

அமித் ஷா (கோப்புப் படம்)

Updated On :13 மே 2022, 9:11 am

தெலங்கானா பிரிவு தலைவர் சஞ்சய் குமாரின் இரண்டாம் கட்ட பாத யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை கலந்துகொண்டு உரையாற்றுகிறார். 

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு, நாளை நகரில் உள்ள ராமந்தபூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்குச் செல்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. 

நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள துக்குகுடாவில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. 

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர், தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

சஞ்சய் குமாரின் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக மே 5 அன்று மகபூப்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அதே நேரத்தில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் பிற மூத்த தலைவர்களும் பாத யாத்திரையில் பங்கேற்றனர்.

மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக உருவெடுக்கும் உறுதியான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் ஷாவின் பொதுக்கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

சஞ்சய் குமார் தனது இரண்டாம் கட்ட பாத யாத்திரையை 'பிரஜா சங்க்ராம யாத்ரா' ஏப்ரல் 14 அன்று கோவில் நகரமான அலம்பூரிலிருந்து தொடங்கினார்.

கடந்த ஆண்டு முதல் கட்ட பாதயாத்திரையை அவர் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.