ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆன்லைன் தேர்வே வேண்டும்! போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்

மேற்கு வங்கத்தில் இணையவழியில் பருவத் தேர்வுகளை நடத்த வலியுறுத்தி பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

News image
Updated On :17 மே 2022, 12:00 pm

DIN


மேற்கு வங்கத்தில் இணையவழியில் பருவத் தேர்வுகளை நடத்த வலியுறுத்தி பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

கோடை வெயில் அதிகம் வாட்டி வதைப்பதாலும், அதிக வெப்பத்தின் காரணமாக பயணம் செய்து பல்கலைக் கழகத்திற்கு வர இயலாது என்பதாலும், இணையவழியில் தேர்வு நடத்த மாணவர்கள் கோரிகை வைத்துள்ளனர்.

அலியா பல்கலைக் கழகத்தில் பருவத் தேர்வுகளை வகுப்பறைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பேசிய மாணவர்கள், இணையவழியில் பருவத் தேர்வினை நடத்த வேண்டும். கோடை வெயில் மற்றும் அதிக அளவு வெப்பநிலை காரணமாக ஆஃப்லைன் தேர்வுக்கு பலரால் வர இயலாது. இதனால் இணைய வழியில் தேர்வை நடத்த வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் தேர்வை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.