மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தில்லியின் புதிய தலைமை நீதிபதியாக தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை: கொலீஜியம்

தெலங்கானா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர வர்மாவை தில்லி உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 மே 2022, 10:31 am

DIN

தெலங்கானா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர வர்மாவை தில்லி உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல தற்போது தற்போது தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த விபின் சங்கி, உத்தரகாண்ட் மாநில உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.படேல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கொலீஜியம் இந்த புதிய தலைமை நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்ற கொலீஜியம் மேலும் நீதிபதிகள்  ஏ.ஏ. சையீது, எஸ்.எஸ்.ஷிந்தியா, ராஷ்மீன் எம் சயா மற்றும் உஜ்ஜால் புயன் ஆகியோரை முறையே ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், கவுகாத்தி, தெலங்கானா ஆகிய உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பரிந்துரைத்துள்ளது. 

இந்த பரிந்துரை முடிவுகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியத்தினால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.