சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் ரயிலில் அடிபட்டு 3 யானைகள் பலி

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதியதில் 2 குட்டிகள் உள்பட மூன்று யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :20 மே 2022, 11:41 am

DIN

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதியதில் 2 குட்டிகள் உள்பட மூன்று யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

சம்புவா மலைத்தொடரின் ஜோடா வனப் பிரிவுக்கு உள்பட பன்சபானி அருகே 20 யானைகளின் கூட்டம் வியாழன் இரவு 7.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

ஒரு யானை குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒரு பெண் யானை மற்றும் மற்றொரு குட்டி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

விபத்தைத் தொடர்ந்து, யானைக் கூட்டம் வனத்துறையினரை மீட்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தது.

வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை நாள் முழுவதும் கண்காணித்து வந்தனர். மேலும், யானைகள் நடமாட்டம் இருப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், ரயிலின் வேகம் மணிக்கு 25 கி.மீ.ஆகக் குறைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருள் சூழ்ந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று மற்றொரு மூத்த வன அதிகாரி தெரிவித்தார். 

கனிம வளங்கள் நிறைந்த கியோஞ்சார் மாவட்டத்தில் ரயில் விபத்துகளால் யானைகள் அடிக்கடி இறப்பது குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளில் 11 யானைகள் ரயில் விபத்துகளாலும், 4 யானைகள் சாலை விபத்துகளாலும், 13 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.