
மகாராஷ்டிர மாநிலம் பல்லார்பூர் பகுதியில் உள்ள காகித ஆலையின் மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
சந்திராபூரில் உள்ள காகித ஆலையின் பல்லார்பூர் மரக் கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பல்லார்பூர் தாசில்தார் சஞ்சய் ரெய்ஞ்ச்வார் கூறினார்.
மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.