பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது.
குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி நாளை தில்லி திரும்பவுள்ளார்.
இதையும் படிக்க | மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
இந்நிலையில், நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மே 26ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.