ஒரு ஆண் இன்னொரு ஆணை மணந்தால் என்னவாகும்? கேட்பது ஒரு முதல்வர்

வரதட்சணை முறையை கடுமையாக விமரிசித்திருக்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒரு பெண்ணை மணமுடிக்க அவரிடமே வரதட்சணை கேட்பதைவிட மோசமானது வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)
Updated on
1 min read

பாட்னா: வரதட்சணை முறையை கடுமையாக விமரிசித்திருக்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒரு பெண்ணை மணமுடிக்க அவரிடமே வரதட்சணை கேட்பதைவிட மோசமானது வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு வேளை, ஒரு ஆண் மற்றொரு ஆணையே மணந்தால் குழந்தை பிறப்பு என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்னாவில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர் விடுதியை திறந்து வைத்துப் பேசிய நிதிஷ் குமார் இவ்வாறு கூறினார்.

அவர் பேசுகையில், எங்கள் காலத்தில் எல்லாம் கல்லூரிகளில் பெண்களே இருக்க மாட்டார்கள். அது எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் இன்றோ, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். அது பொறியியலாகவோ அல்லது மருத்துவமாகவோ இருக்கட்டும். மகளிர் சுயஅதிகாரம் பெறுவதற்கு பல்வேறு முன்னெடுத்தல்கள் செய்யப்பட்டு வருகிறது. வரதட்சணை முறைக்கும் குழந்தைகள் திருமணத்துக்கும் எதிரான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com