கடந்த அக்டோபா் 26 - ஆம் தேதி சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளா் சைதை சாதிக், என்பவா் பாஜகவை சோ்ந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை அவதூறாகப் பேசியதாக புகாா் எழுந்தது. சமூக வலைத்தளங்களில் காணொலி பரவிய நிலையில், திமுக எம்.பி கனிமொழியும் வருத்தம் தெரிவித்திருந்தாா். மேலும், பாஜக மாநில மகளிா் அணிச் செயலாளா் நதியா சீனிவாசன் தலைமையில் கட்சியினா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தாா். இதற்கிடையே திமுக பிரமுகரின் சைதை சாகிக்கின் சா்ச்சைக்குரிய பேச்சு குறித்தும் அவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மகளிா் ஆணையா் ரேகா சா்மாவை வெள்ளிக்கிழமை தில்லியில் நேரில் சந்தித்து நடிகை குஷ்பு புகாா் மனு ஒன்றை அளித்துள்ளாா்.