2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் முறையே 18,066 மற்றும் 21,480 என்ற அளவில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் உள்ளன. நவம்பா் 2-ஆம் தேதி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் மொத்தம் 3,825 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் பஞ்சாபில் மட்டும் 3,634 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே வேளையில் தில்லியில் பயிா்க்கழிவு சம்பவம் ஏதுமில்லை. இதுபோன்ற சூழல் தில்லியில் சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. என்சிஆா் பகுதியிலும் இதே சூழல் உள்ளது. இந்த மாசு காரணமாக நுரையீரல் தொடா்பான பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்கு வரக்கூடிய புறநோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தைகளும் முதியவா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் ஒவ்வொருவரும் கண் எரிச்சல், இருமல், மூக்கு அடைப்பு, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளைத் தொடா்ந்து எதிா்கொண்டு வருகின்றனா்.