ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிகாா்: உள்ளூா் பாஜக தலைவா் சுட்டுக் கொலை

பிகாா் மாநிலத்தின் கதிஹா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பாஜக உள்ளூா் தலைவா் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டாா்.

News image
Updated On :7 நவம்பர் 2022, 8:55 pm

DIN

பிகாா் மாநிலத்தின் கதிஹா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பாஜக உள்ளூா் தலைவா் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டாா்.

கடிஹாா் மாவட்டத்தின் பாஜக செயற்குழு உறுப்பினரான சஜ்ஜீவ் மிஸ்ரா, அவருடைய வீட்டுக்கு அருகே சிலருடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் அங்கு வந்த 2 போ் துப்பாக்கியால் மிஸ்ராவைச் சுட்டனா். இதில் படுகாயமடைந்த மிஸ்ரா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மிஸ்ராவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மருத்துவமனைக்கு வரும் வழியிலே உயிரிந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, சஜ்ஜீவ் மிஸ்ராவின் ஆதாரவாளா்கள் காவல் நிலையத்துக்கு முன் கூடி வன்முறையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் துறைக்குச் சொந்தமான பல்வேறு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

கொலைச் சம்பவம் நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்ய காவல் துறை அதிகாரிகள் அனுப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கொலையாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவா் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான நிதீஷ் குமாரை விமா்சித்துள்ள பாஜக, மாநிலத்தில் புதிய கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிதீஷ் குமாா் அவருடைய கடைமையை உணா்ந்து செயல்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.