குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முடிவுக்கு வந்தது கென்யா ஏர்வேஸ் விமானிகளின் வேலைநிறுத்தம்!

கென்யா தேசிய விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள்  4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணியை இன்று தொடங்கியுள்ளனர். 

News image
Updated On :9 நவம்பர் 2022, 9:59 am

DIN

கென்யா தேசிய விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள்  4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணியை இன்று தொடங்கியுள்ளனர். 

கென்யா ஏர்வேஸ் கரோனா தொற்று நோய்க்கு முன்னும், பின்னும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. எனவே ஓய்வூதிய சேமிப்பில் பணம் செலுத்த முடியாது என்று தெரிவித்த நிலையில், ஏர்வேஸ் விமானிகள் கடந்த 4 நாள்களாக பணியைப் புறக்கணித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வேலை நிறுத்தம் செய்யும் விமானிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிறுவனம் அச்சுறுத்தியது மற்றும் காலியிடங்களை விளம்பரப்படுத்தியது. 

வேலைநிறுத்த போராட்டத்தால் விமான நிறுவனத்துக்கு தினசரி  $2.4 மில்லியன் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, செவ்வாயன்று கென்யா ஏர்வேஸ் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றதுடன், முடிந்தவரை குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிந்த அனைத்து ஏற்பாடுகளும் செய்வோம் என்று எர்வேஸ் நிறுவனம் உறுதியளித்தது. 

ஓய்வூதிய சேமிப்பு நிதி தொடர்பான சர்ச்சையைத் தீர்க்கத் தவறியதைத் தொடர்ந்து, தங்கள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற விமானிகளை மிரட்ட வேண்டாம் என்று கென்யா ஏர்வேஸுக்கு செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கென்யா ஏர்வேஸ் விமானிகளின் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. நான்கு நாள்கள் வேலை நிறுத்தத்தால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.