கொசுக்கடியினால் பரவக் கூடிய டெங்கு நோயானது உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னௌவில் அதிகரித்து வருகிறது. அண்மையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னௌவில் பரவி வரும் டெங்கு நோய் குறித்தும், நோயினைத் தடுப்பதற்கு உத்தரப் பிரதேச மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் கேள்வி எழுப்பியது. அதில், அரசு எடுக்கும் நடவடிக்கைகளை செய்தித் தாள்களில் மட்டுமே காண முடிகிறது எனவும், கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்த சூழலில் இன்று ( நவம்பர் 12) உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் முக்கியக் கூட்டம் நடைபெற்றது.