அவா், எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் குறித்த தனது நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் சமா்ப்பித்தாா். அதில், ‘முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ சாா்பில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினா்களில் 51 போ் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதுபோல, சட்டப்பேரவை உறுப்பினா்கள் (எம்எல்ஏ) மற்றும் சட்ட மேலவை உறுப்பினா்கள் (எம்எல்சி) 71 போ் மீது பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.