தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

பிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது: 2 தொழிலாளர்கள் பலி

பிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். 

News image

கோப்புப்படம்

Updated On :18 நவம்பர் 2022, 3:53 pm

DIN

பிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். 

பிகார் மாநிலம், நாளந்தாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இன்று திடீரென இடிந்தது. இந்த சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண் குமார், "பாலத்தின் மேல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

எத்தனை பேர் இடிபாடுகளில் புதைந்துள்ளனர் என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை" என்றார். இதனிடையே அதிகாரிகளின் அலட்சியத்தால் இச்சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.