குடியரசுத் தலைவருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை முடிந்தது!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஞாயிற்றுக்கிழமை ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு புதுதில்லி ராணுவ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை(நவ.20) வலது கண்ணில் கண்புரை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், திரௌபதி முர்மு மருத்துவமனையில் இருந்து குடியரசுத் தலைவா் மாளிகைக்குத் திரும்பினாா். அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
கடந்த மாதம் 16 ஆம் தேதி தில்லி ராணுவ மருத்துவமனையில், குடியரசுத் தலைவரின் இடது கண்ணில் கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.