நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

போலியோ தடுப்புக்குழு மீது தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி!

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்று காவலர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 

News image
Updated On :30 நவம்பர் 2022, 9:29 am

DIN

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்று காவலர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 

போலியோ தடுப்பு மருந்து முகாம்கள், குழுக்களைக் குறிவைத்து, பயங்கரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவாட்டா நகரில் உள்ள பலேலி பகுதியில் இன்று போலியோ மருந்து முகாம் நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அழைத்துச் செல்லப்பட்டனர். 

அப்போது போலீஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உள்பட மூவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.