தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விவசாயக் கழிவுகளை எரித்தால் ஏக்கருக்கு ரூ. 2,500 அபராதம்! எங்கு தெரியுமா?

குருகிராமில் விவசாயக் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

News image
Updated On :12 அக்டோபர் 2022, 9:41 am

DIN

குருகிராமில் விவசாயக் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் சுற்றுக்சூழல் மாசடைகிறது. இதனைத் தடுக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் ஹரியாணா மாநிலம் குருகிராமில் மரக்கன்றுகள், விவசாயக் கழிவுகள் எரிப்பதைத் தடுக்கும் வகையில் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மாவட்டத்தில் விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என்று துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் கூறியுள்ளார். 

மேலும், கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதுகுறித்து கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.