மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாலை 3.20 மணிக்கு தில்லி வந்த விமானத்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.
மாஸ்கோவிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை தில்லி வந்த பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, தில்லியில் அதிகாலை 3.20 மணிக்கு வந்த விமானத்திலிருந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் இறக்கிவிடப்பட்டனர்.
இதையும் படிக்க.. கேரள நரபலி: தம்பதி பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொல்லும் அண்டைவீட்டார்
பிறகு, விமானம் முழுக்க வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விமானத்தை சோதித்ததில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.