ஜார்க்கண்டில் செல்ஃபி எடுக்கும்போது நேர்ந்த விபரீதம்: ஒருவர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தின் ரயில் பாலத்தில் செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்ட விபரீதத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
செல்ஃபி எடுக்கும் போது 140 அடி பள்ளத்தில் விழுந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
செல்ஃபி எடுக்கும் போது 140 அடி பள்ளத்தில் விழுந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தின் ரயில் பாலத்தில் செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்ட விபரீதத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

லதேஹர் மாவட்டத்தில் ரயில்வே பாலத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நண்பர்களான நசீர் அன்சாரி, ஃபிர்தௌஸ் அன்சாரி மற்றும் ரிஸ்வான் அன்சாரி ஆகிய மூவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை காலா நதி ரயில் பாலத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். 

அப்போது சரக்கு ரயில் மூவர் மீதும் மோதியது. நசீர் பாலத்தின் கீழ் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இருவரும் அருகில் உள்ள லதேஹரின் சர்தார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com