தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கார்கே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக.. பாஜக பகிரங்க குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அக்கட்சி தேர்தலில் மோசடி செய்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image

கார்கே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக.. பாஜக பகிரங்க குற்றச்சாட்டு

Updated On :20 அக்டோபர் 2022, 10:19 am

புது தில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அக்கட்சி தேர்தலில் மோசடி செய்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றால்தான், காந்தி குடும்பத்தின் ரப்பர் ஸ்டாம்பாகத் திகழ்வார் என்பதால், அவரை வெற்றிபெற வைக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டில் பாஜக தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய பின்னணி கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக, மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே, இவரை கடுமையான விமரிசித்து வரும் பாஜக, தற்போது அவரை ரப்பர் ஸ்டாம்ப் என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கும் பாஜக, தற்போது, தலைவர் தேர்தலில் கார்கே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முறைகேடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதாவது கார்கேவுக்கு 88 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது 90 சதவீதத்துக்கு சற்றுத்தான் குறைவு. இதை அடிப்படையாக வத்து சசி தரூர் முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அந்த நடவடிக்கையும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றார்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது, கார்கேவுக்கு சசி தரூர் வாழ்த்துக் கூறினார். ஆனால் முன்னதாக வாக்குகள் பதிவான போது முறைகேடு நடந்ததாக சசி தரூர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுவரை மன்மோகன் சிங்கை வைத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்ன செய்ததோ அதே ஃபார்முலா கார்கேவுக்கும் பொருந்தும் எனறும் பாஜக குறிப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.