அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வழக்கற்றுப் போன 1,500 சட்டங்களை ரத்து செய்ய முடிவு: கிரண் ரிஜிஜு

‘வழக்கற்றுப்போன 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்பட உள்ளன’ என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

News image

கிரண் ரிஜிஜு

Updated On :22 அக்டோபர் 2022, 10:40 pm

‘வழக்கற்றுப்போன 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்பட உள்ளன’ என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்கவேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேகாலய தலைநகா் ஷில்லாங்கில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

வழக்கற்றுப்போன சட்டங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்துவதாகவும், இன்றைய காலத்துக்கு தொடா்பில்லாததவையாகவும் இருக்கின்றன.

அதே நேரம், மக்களுக்கு அமைதியான வாழ்வை உறுதிப்படுத்துவதும், அவா்களின் சுமையை குறைப்பதும் பிரதமரின் விருப்பமாக உள்ளது. பொதுமக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்க வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்.

அந்த வகையில், வழக்கற்றுப்போன அனைத்து சட்டங்களையும் பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிற தேவையற்ற சட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றை நீக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது. அதன்படி, வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சட்டம் என்பது மக்களுக்கு நீதியை வழங்குவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, தொல்லையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. பொதுமக்களுக்கான சுமுக வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளை பரிந்துரைப்பதாக சட்டங்கள் இருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.