தீபாவளி திருநாளைக் கொண்டாட நாடு முழுவதும் மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.
நகரங்களின் கடை வீதிகள் மக்களால் நிரம்பி வழிகின்றன. இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் தீபாவளிக்காக புத்தாடைகள், பொருள்கள் வாங்குவதில் மக்கள் மும்முரமாக இருக்கின்றனர்.
புது தில்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் தீபாவளிக்காகப் பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
தில்லி குருகிராமில் தீபாவளிக்காக ஏராளமாகப் பூக்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. சந்தையில் மக்கள் குவிகின்றனர்.
பாட்டியாலாவில் நகைக்கடையொன்றில் தீபாவளிக்காக நகை வாங்குவதற்கு வந்து அணிந்து பார்க்கிறார் ஒரு பெண்மணி.
தில்லி சதர் பஜாரில் திரண்டுள்ள மக்கள் கூட்டம்.
ஜம்முவில் தீபாவளி விற்பனைக்காக அடுக்கப்படும் பட்டாசுகள்.
பிரயாக்ராஜில் சந்தையில் வீட்டு அலங்காரப் பொருள்களை வாங்கும் பெண்கள்.