இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அச்சம்: குடும்பத்தோடு வீடுகளை காலி செய்த காஷ்மீரி பண்டிட்கள்!

காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 10-க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் குடும்பத்தோடு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

News image
Updated On :26 அக்டோபர் 2022, 12:00 pm

DIN

காஷ்மீர் பண்டிட் பூரன் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அச்சத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் தங்கள் குடும்பத்தோடு வீடுகளை விட்டு வெளியேறி ஐம்முவுக்கு இடம் பெயர்ந்தனர். 

அக்டோபர் 15ம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌத்ரிகுண்ட் கிராமத்தில் பட் தனது வீட்டிற்கு வெளியே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். 

பட்  கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 35 பேர் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சௌதரிகுண்ட் கிராமத்தில் உள்ள தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி ஜம்முவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அக்.18 அன்று உள்ளூர் அல்லாத மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் மீது பயங்கரவாதி ஒருவர் கையெறி குண்டு வீசியதில் இருவரும் உயிரிழந்தனர். 

பயங்கரவாதி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.