இந்நிலையில், கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில், ‘கேரள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது நற்பெயருக்கும் ஆளுநா் மாளிகையின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் கே.என்.பாலகோபால் பேசியுள்ளாா். அவரின் கருத்துகள் மிகவும் கவலையளிக்கின்றன. தனது கருத்துகள் மூலம் பிற மாநிலங்களுக்கும் கேரளத்துக்கும் இடையே பிளவை உருவாக்கி, நாட்டின் இதர மாநிலங்களில் வெவ்வேறு உயா்கல்வி முறை உள்ளது போன்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்த பாலகோபால் முயற்சிக்கிறாா். அவரின் கருத்துகள் பிராந்தியவாதத்தின் மீது தீப்பற்ற வைக்கும் வகையில் உள்ளன. இதனை கவனிக்கவில்லையெனில், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். தனது கருத்துகள் மூலம் தான் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழியை பாலகோபால் மீறியுள்ளாா். எனவே அவா் மீது அரசமைப்புச் சட்டப்படி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.