இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வாத்துகளில் பறவைக் காய்ச்சல் உறுதி, இத்தனை வாத்துகள் அழிக்கப்படுகிறதா?

கேரளத்தில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் உறுதியானதால் 20 ஆயிரம் வாத்துகளை அழிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 அக்டோபர் 2022, 1:07 pm

DIN

கேரளத்தில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் உறுதியானதால் 20 ஆயிரம் வாத்துகளை அழிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மூலம் மற்ற பறவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தின் ஆலப்புழாவில் ஹரிபாத் நகராட்சியில் உள்ள பறவைகள் இத்தகைய பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: அண்மையில் போபாலில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொடுக்கப்பட்ட மாதிரிகளில் பறவைகள் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் ஹரிபாத் நகராட்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளில் உள்ள பறவைகள் அனைத்தும் பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய அபாயம் உள்ளது. அதனால், 20,471 வாத்துகள் ஹரிபாத் நகராட்சியில் கொல்லப்பட உள்ளன. இதனை செய்து முடிப்பதற்காக 10 பேர் கொண்ட 8 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாத்துகளை அழிக்கும் பணிகள் நிறைவடைந்தாலும் பறவைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.