குளிர்காலம் தொடங்கியதால் கேதார்நாத் கோயில் மூடல்!

குளிர்காலத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலின் நடை  இன்று காலை மூடப்பட்டன. 
குளிர்காலம் தொடங்கியதால் கேதார்நாத் கோயில் மூடல்!

குளிர்காலத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலின் நடை  இன்று காலை மூடப்பட்டன. 

இந்த ஆண்டு சார்தாம் யாத்திரை மே 3ஆம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. இதில் கேதார்நாத் கோயில் மே 6ஆம் தேதி திறக்கப்பட்டது.

பாரம்பரியமாக, சார்தாம் கோயிலின் சன்னதிகள் குளிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும். இந்நிலையில் கேதார்நாத் கோயிலின் நடை இன்று சாத்தப்பட்டது. சிவன் சிலை உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு வழிபாடு செய்யப்படும். 

இதையொட்டி கருவறையின் கதவுகள் மூடப்பட்ட பிறகு, கேதார்நாத்தின் பஞ்சமுகி நகரக்கூடிய விக்ரஹ உற்சவ் டோலி (பல்லக்கு) சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. காலை சரியாக 8.30 மணிக்கு, திரண்டிருந்த பக்தர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் கேதார்நாத் சிவனின் பல்லக்கு மண்டபத்திலிருந்து கோயில் வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

பல்லக்கில் எடுத்துச் செல்லப்படும் சிவன் சிலை நாளை உகிமாத்தில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலைச் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com