ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு மத்திய ஆயுதப் படை பாதுகாப்பு

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு இன்றுமுதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு மத்திய ஆயுதப் படை பாதுகாப்பு
Published on
Updated on
1 min read

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு இன்றுமுதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய மூன்று தீவிரவாதிகள் நுழைய முயன்றதை தொடர்ந்து, மாநில ரிசர்வ் காவல் படையினர் 15 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்தனர்.

இந்நிலையில், அச்சுறுத்தல் காரணமாக ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திற்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து, இன்றுமுதல் காவல் துணை ஆணையருக்கு இணையான அதிகாரி தலைமையில் 150 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நாட்டின் சில விமான நிலையங்களில் தனியார் பாதுகாப்புப் படை பணியமர்த்தல் மற்றும் தானியங்கி தொழில்நுட்ப வசதிகள் நிறுவப்பட்டதன் காரணமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com