மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட அனைத்து அரசியல் குழப்பங்களுக்கும் உத்தவ் தாக்கரேதான் காரணம். மேலும், அவரது செயல்பாடுகள் காரணமாகத்தான் சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்டது. அரசியல் சாா்ந்த முடிவுகளை உத்தவ் தாக்கரே தவறாக மேற்கொண்டதால் அவா் அரசியல்ரீதியாகவும் தோல்வியைத் தழுவிவிட்டாா். அவா் முதல்வராக இருந்தபோது, ‘உங்களால் முடிந்தால் எனது அரசைக் கவிழ்க்க முயற்சிக்கலாம்’ என்று சவால் விடுப்பாா். அப்போது, ‘உங்கள் அரசு ஒரு நாள் தானாகவே கவிழ்ந்துவிடும். அதனை உங்களால் உணரக் கூட முடியாது’ என்று நான் பதில் அளித்தேன். அதுதான் நிகழ்ந்துள்ளது.