கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: பிரதமர் மோடி

பழம்பெரும் தெலுங்கு நடிகர்  யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: பிரதமர் மோடி

பழம்பெரும் தெலுங்கு நடிகர்  யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது: “யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரைப்படத்துறை சம்பந்தமான அவரது அறிவுக்கூர்மை மற்றும் படைப்பாற்றலை எதிர்கால தலைமுறை என்றும் நினைவில் கொள்ளும். 

சமூக சேவையில் முன்னோடியாக இருந்ததோடு, அரசியல் தலைவராகவும் அவர் தடம் பதித்தார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com