ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உ.பி.யில் தலித் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமியை பாலியல் வன்கொலை செய்ததாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

News image

திருவண்ணாமலை: பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த தாளாளர் கைது

Updated On :12 செப்டம்பர் 2022, 11:36 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமியை பாலியல் வன்கொலை செய்ததாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றது. 

இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி பிரபாஸ் சந்திரா கூறுகையில், 

அதே கிராமத்தைச் சேர்ந்த குற்றவாளி தனது மகளை வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். 

சிறுமி காணாமல் போனதை அறிந்த அவரது குடும்பத்தினர் வயலில் தேடினர். சுயநினைவு அடைந்த பின்னர் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், காவல்துறையை அணுகினால் சிறுமியைக் கொன்றுவிடுவேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டியதாக அவரது தந்தை கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.