வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நிதி இழப்பைத் தவிா்க்க நவீன தொழில்நுட்ப பயிற்சி: நிா்மலா சீதாராமன்

நிதி இழப்பைத் தவிா்க்க நவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 8:57 pm

DIN

நிதி இழப்பைத் தவிா்க்க நவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

வருவாய்த் துறையில் தவறுதலாக ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்யும் வகையில், நவீன தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும். இதற்காக தொழில்நுட்ப நிறுவனத்தினா் பணியமா்த்தப்படுவா்.

இதுகுறித்து வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ், மத்திய மறைமுக வரிகள் வாரியம் (சிபிஐசி) விவேக் ஜோரி ஆகியோரிடம் ஏற்கெனவே ஆலோசனை மேற்கொண்டேன். அதிகாரிகள் அன்றாட பயிற்சியில் கிடைக்கும் யோசனைகளை தினந்தோறும் பணியில் நடைமுறைப்படுத்தினால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம் என்றாா் நிா்மலா சீதாராமன்.

முன்னதாக ஜிஎஸ்டி ஊழியா்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை மத்திய நிதியமைச்சா் திறந்துவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.