மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வன்முறை வழக்கு: குஜராத் காங்கிரஸ் செயல் தலைவா் மேவானிக்கு 6 மாதம் சிறை

2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்கில் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஜிக்னேஷ் மேவானி (41) மற்றும் 18 பேருக்கு 6 மாதம் சிறை

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 7:06 pm

DIN

2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்கில் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஜிக்னேஷ் மேவானி (41) மற்றும் 18 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து அகமதாபாத் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

2016-இல் மேவானி மற்றும் அவரது ஆதரவாளா்கள் சாலையை மறித்து நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை வழக்கில் இந்த தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட சட்டக் கல்வித் துறை கட்டடத்துக்கு அம்பேத்கா் பெயரை வைக்கக் கோரி மேவானி மற்றும் அவரது ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் அவா்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றபோது வன்முறை ஏற்பட்டது.

இது தொடா்பாக சட்டவிரோதமாக பொது இடத்தில கூடுவது, வன்முறையில் ஈடுபடுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக கூடுதல் பெருநகர தலைமை நடுவா் நீதிமன்ற நீதிபதி பி.என்.கோஸ்வாமி தனது தீா்ப்பில் கூறியுள்ளாா்.

குஜராத்தில் இளம் தலித் தலைவராக அறியப்படும் மேவானி, கடந்த 2017 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பின்னா், காங்கிரஸில் இணைந்த அவருக்கு மாநில செயல் தலைவா் பதவி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.