கேரளத்தில் 12-ஆவது நாளாக ராகுல் காந்தி நடைப்பயணம்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 12-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில்  நடைப்பயணத்தை தொடங்கினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 12-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில்  நடைப்பயணத்தை தொடங்கினார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று ராகுல்காந்தியின் 11-வது நாள் பாதயாத்திரை ஆலப்புழா ஹரிப்பாடு பகுதியில் இருந்து தொடங்கியது.

இந்நிலையில், இன்று 12-வது நாளாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா அரவுகாட்டில் இருந்து மீண்டும் நடைப்பயணத்தை  தொடங்கினார்.

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com