தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்: காவல்நிலையத்தில் புகாரளித்த உரிமையாளர்கள்

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் உரிமையாளர்கள் தங்களது குடியிருப்பின் கட்டுமான நிறுவனம் மீது மர்த்தஹல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

News image

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்: காவல்நிலையத்தில் புகாரளித்த உரிமையாளர்கள்

Updated On :21 செப்டம்பர் 2022, 6:12 am


பெங்களூரு: பெங்களூருவின் வெளிவட்டச் சாலையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் அசென்டியா அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் உரிமையாளர்கள் தங்களது குடியிருப்பின் கட்டுமான நிறுவனம் மீது மர்த்தஹல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

செப்டம்பர் முதல் வாரத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக முதல் தளங்கள் தண்ணீரில் மூழ்கியதும், தங்களது விலைஉயர்ந்த கார்கள் தண்ணீர் மூழ்கி வீணானது, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்காதது என பல குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சுமார் 172 குடியிருப்புகள் அடங்கிய இந்த கட்டடத்தின் கீழ் பகுதியல் நிறுத்தப்பட்டிருந்த 29 கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இது மட்டுமல்ல, இந்தக் குடியிருப்புக்கு அருகே புதிதாக இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதால் பகல் நேரத்தில் கடுமையான இரைச்சல் கேட்கிறது. இது அதிகபட்ச ஒலி அளவை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. 

குடிநீர் முதல், அனைத்துத் தேவைகளுக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து இழப்புகளுக்கும் கட்டட கட்டுமான நிறுவனமே காரணம். அதுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குடியிருப்புகளில் வாழ்வோர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.