தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதில் சோனியா குடும்பத்துக்கு ஆட்சேபம் இல்லை: சசி தரூா்

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் தான் போட்டியிடுவதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ஆட்சேபம் இல்லை என்று அக்கட்சி எம்.பி. சசி தரூா் தெரிவித்துள்ளாா்.

News image
கேரள மாநிலம் பட்டாம்பியில் ராகுல் காந்தியின் ஒருங்கிணைப்பு யாத்திரையில் திங்கள்கிழமை சோ்ந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூா்.
Updated On :26 செப்டம்பர் 2022, 7:08 pm

DIN

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் தான் போட்டியிடுவதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ஆட்சேபம் இல்லை என்று அக்கட்சி எம்.பி. சசி தரூா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் செப்.24 முதல் செப்.30 வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் சசி தரூா் போட்டியிட உள்ளாா்.

இந்நிலையில், கேரளத்தில் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை, பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியில் சசி தரூா் திங்கள்கிழமை சந்தித்தாா்.

அதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராகுல் காந்தியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு பெற்றுள்ளேன். தோ்தலில் போட்டியிட வேண்டும் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பலா் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நான் தோ்தலில் போட்டியிடுவதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ஆட்சேபம் இல்லை. இதனை அவா்கள் என்னிடம் நேரடியாகத் தெரிவித்தனா். நான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது எனக்குள்ள ஆதரவு அனைவருக்கும் தெரியவரும் என்று தெரிவித்தாா்.

கடந்த 2000-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவா் பதவிக்குத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாதாவை வீழ்த்தி சோனியா காந்தி கட்சித் தலைவரானாா். அதன் பின்னா், தற்போதுதான் அக்கட்சி தலைவா் பதவிக்குத் தோ்தல் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.